நம் வீட்டில் இருக்கும் பலவிதப் பொருட்களும், எண்ணற்ற மருத்துவத் தன்மைகளைக் கொண்டது. குறிப்பாக, அஞ்சறைப் பெட்டியில் உள்ள அனைத்து வகையான உணவுப் பொருட்களும், உடல் நலத்தை சரியாக வைக்க உதவும் என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றே. மற்ற நாட்டு உணவுப் பொருட்களைக் காட்டிலும் நம் இந்திய உணவுப்பொருட்கள் ஒவ்வொன்றிலும் பலவித மருத்துவ குணங்கள் ஒளிந்து கொண்டுள்ளது.
தங்கப் பால் மற்றும் கருப்புத் தங்கம்
பாலில் மஞ்சளைக் கலந்து சாப்பிட்டால் பலவித நன்மைகளை ஏற்படுத்தும் என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர். பால் மற்றும் மஞ்சளின் கலவையை “தங்கப் பால் ” என்று அழைக்கிறார்கள். பொதுவாகவே மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி. எத்தகைய வகையான உடல் சார்ந்த நோய்களையும் இது சரி செய்ய வல்லது. அதே போன்று “கருப்பு தங்கம்” என்று கூறப்படும் மிளகும் உடல் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளைத் தரக் கூடியது.

மஞ்சளில் குர்குமின் (Curcumin) என்ற மூலப் பொருள் உள்ளது. இதுதான் மஞ்சளின் மருத்துவத்தன்மைக்கு முதல் காரணம். இந்த மூலப்பொருள், நோய்கள் உடலில் வராமல் தடுக்கிறது. அத்துடன் இதய நோய்கள், முடக்கு வாதம், புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து காக்கிறது.
அதே போன்று மிளகில் உள்ள பைப்பரின் (piperine) என்ற மூலப்பொருள் மிளகின் மருத்துவ குணத்தைக் குறிக்கிறது. ஆனால், இவை இரண்டின் வேதி வினை பல வகையான நன்மைகளை உடலுக்கு ஏற்படுத்துமாம்.
புற்றுநோயை குணப்படுத்தும்
பல ஆராய்ச்சிகளை மேற்கொண்ட விஞ்ஞானிகள், 20 மில்லி கிராம் பைப்பரின் மற்றும் 2 கிராம் குர்குமின் ஆகியவை எத்தகைய பலனை உடலுக்குத் தருகிறது என்பதைக் கண்டறிந்துள்ளனர். அவற்றின் முடிவு ஏராளமான நன்மைகளை தரவல்லது.
அதாவது, மிளகையும் மஞ்சளையும் சேர்த்து உண்டால் அது புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக மாறுமாம். மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், ரத்தப்புற்றுநோய் ஆகியவற்றில் இருந்தும் இவை காக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
நீங்கள் உடல் பருமனாக இருப்பதால் மிகவும் மனம் வருந்துகிறீர்களா..? இதைச் சரி செய்ய மஞ்சள் மற்றும் மிளகே போதும். வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றைத் தூளாக்கி கலக்கவும். அத்துடன், சிறிது இஞ்சியைச் சேர்த்து தினமும் காலையில் குடித்து வந்தால் உடலின் எடையை சீராக வைத்துக் கொள்ள முடியும் . மேலும், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை இந்த பானம் கரைக்குமாம்.

மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு கூட்டணி வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறது. இவற்றின் கலவை ஜீரணத்தை சீராக்குகிறது. குடல் அல்லது வயிற்றுப் பகுதியில் ஏதேனும் வீக்கம் அல்லது புண் ஏற்பட்டால் அவற்றை மிக விரைவிலேயே குணப்படுத்துக்கிறது.
நம் நாட்டின் இயற்கை மருத்துவமான ஆயர்வேதத்தில் கூட இவற்றின் கலவைதான் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. பல ஆயிரம் வருடங்களாக இவற்றைத்தான் ஆயுர்வேத மருத்துவத்தில் முன்னோர்கள் பயன்படுத்தினர். முடக்கு வாதம், கீழ் வாதம், மூட்டு பிரச்சினை ஆகியவற்றிற்கு மஞ்சளும் மிளகும் சிறந்த மருந்தாகும்.
மஞ்சள் மற்றும் மிளகுப்பால்
மஞ்சள் மற்றும் கருப்பு மிளகை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை இனி அறிவோம். இந்தப் பாலை நீங்களும் வீட்டில் தயார் செய்து குடியுங்கள்.
தேவையானவை :-
1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
1/4 தேக்கரண்டி கருப்பு மிளகு தூள்
1/2 தேக்கரண்டி துருவிய இஞ்சி
1 கோப்பை பால்
1 மேசைக்கரண்டி தேன்
செய்முறை:-
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொண்டு, அதில் பாலை ஊற்றி மிதமான சூட்டில் வைத்து விட்டு, பின் அதனுடன் தேனைத் தவிர மற்ற பொருட்களை சேர்த்துக் கொள்ளவும். அடுத்து அவற்றை வடிகட்டி, சிறிது நேரம் ஆறவிட்டுக் கடைசியாக தேன் சேர்த்து குடிக்கலாம்.
இவ்வாறு செய்தால் உடல் மிகவும் வலிமை பெரும். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல விதமான நோய்களில் இருந்து காக்கும்.